தமிழ் நூற்குழு

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

நன்னூல்

நூல் கற்றலின் இயல்பென்பது

  • உலக வழக்கு என்ன என்பதை கற்றுக் கொள்ளுதல்
  • படிக்கும் புத்தகம் என்ன சொல்கிறது என்று கற்றல்
  • புத்தகம் உலக வழக்கோடு இசைந்து அல்லது மாறு படுவதை எண்ணுதல்
  • எண்ணி படிக்கும் கருத்துகளை தர்க்கரீதியாக நினைத்தல்
  • அறிதலில் தடை இருந்த்தால் ஆசிரியரிடம்/அறிந்தவரிடம் கேட்டல்.
  • விவாதித்து படித்தல்.
  • இவ்வகை குணமுள்ளவருடன் இணைந்து படித்தல்.
  • கற்பவை அனைத்தையும் மெய்ப்பொருள் உணர்தலுக்காக ஆராய்ந்து, கேள்வி கேட்டு, பிறர் கேள்விகளுக்கு பதில் தந்து படித்தல்.

இவற்றை கடமையாக கொண்டால், மடமை வேகமாக நீங்கும்!

மாதந்தோறும் ஒரு புத்தகத்தை குழுவில் தேர்ந்தெடுத்து, தனித்து வாசித்து, இணைந்து ஆலோசிக்கிறோம்.

கற்றது கைம்மண் அளவு

2020-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பல புத்தகங்களை குழுவில் வாசித்து வருகிறோம்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக 

வாருங்கள். வாசிப்போம்!

By submitting your information, you`re giving us permission to email you.